விழுப்புரம் அடுத்த சங்கீதமங்கலம் கண்ணாரத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து பயனின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த மினிகுடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.