கருங்கலில் இருந்து பூவன்சந்தி திருப்பத்தில் விபத்து பகுதி என்ற பதாகை மழைநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக மழைநீர் வடிகால் ஓடையில் பாய்கிறது. இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.