பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

Update: 2025-04-06 11:59 GMT

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் கிராம ஊராட்சி மூலமாக செங்குணம் அண்ணா நகரில் குடிநீர் கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்தில் 2020-ம் ஆண்டு ரூ.8 லட்சத்தில் புதியதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. மையத்தின் ஒரு கருவியில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி பாத்திரத்தில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வருவதில்லை. இதனால் ஏற்கனவே இம்மையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திய பலரும் தற்போது குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்