மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் ஊராட்சியில் உள்ள புதுவிநாயகர் நகர் நுழைவு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து புதுவிநாயகர் நகர் பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.