குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2025-03-16 16:53 GMT

புதுச்சத்திரத்தை அடுத்த கம்பளிநாயக்கன்பட்டி, பொம்மநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்