அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.