பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி அவர்கள் கடையில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.