பெரம்பலூரில் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையத்தின் உள்ளே குடிநீர் வசதி இல்லை. இதனால் பயணிகள் பலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடிநீருக்கு என்று கொஞ்சம் பணத்தை செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.