பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த குடிநீர் தொட்டி தற்போது பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.