நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பறக்கை சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்தது. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், சாலையும் சேதமடையும் நிலை இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி புகார்பெட்டி’யில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-ஜான்சிலின், பறக்கை.