விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சிங்கம்மாள்புரம் தெருவில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் போதிய அளவு குடிநீர் குழாய் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.எனவே அப்பகுதி மக்களின் சிரமத்தை போக்க குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?