தூர்வாரப்படாத ஏரி

Update: 2025-01-05 11:38 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் தேங்கும் போது, வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த ஏரியானது பராமரிப்பு இன்றி தூர்ந்துபோன காரணத்தினால் மழை பெய்யும்போது இந்த ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்துகள் அனைத்தும் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஏரிக்கு மழைநீர் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்