களியல்-அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக திற்பரப்பு அருகே உள்ள களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து சாலையில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. உண்ணியூர் கோணம் அரசு நடுநிலைப்பள்ளி அருகிலும், குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு பகுதியிலும் இந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி குழாய் உடைப்பை சரிசெய்து சேதமடைந்த சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், குலசேகரம்.