அந்தியூர் அருகே சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் புதுமேட்டூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் முறையாக ஆற்று நீர் வினியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படுகின்றனர். எனவே பராமரிப்பின்றி காணப்படும் இந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.