அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் அளவேரி ஏரியில் உள்ள மதகு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் உள்ள மதகு சேதமடைந்து விட்டதால் மழைநீரை சேமிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் மழைநீர் வீணாக காட்டுவாரி ஓடையில் சென்றுவிடுகிறது. எனவே சேதமடைந்த மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.