குடிநீர் வேண்டும்

Update: 2024-09-15 07:58 GMT

ஆனைமலை தாலுகா கோட்டூர் அருகே ஆழியாறு நகர் நெல்லித்துறை மன்னம் கிராமத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தாகம் தீர்க்க புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களாக அந்த திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதற்கு காரணம், அடிக்கடி குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்புதான். இதனால் உப்பு தண்ணீரையே குடிக்க பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. எனவே சீராக குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்