பூட்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2024-07-14 18:39 GMT

மேட்டூர் தாலுகா தெத்திகிரிபட்டி கிராமம் அருகே உள்ள ஆனைக்குட்டையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஆண்டு குடியிருப்பு வாசிகள் பயன்படுத்துவதற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியது உள்ளது. எனவே அதிகாரிகள் பூட்டி கிடக்கும் குடிநீர் தொட்டியை திறக்க நடவடிக்கை வேண்டும்.


மேலும் செய்திகள்