குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2024-07-14 18:37 GMT

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாரமங்கலம் செல்லும் வழியில் குண்டுக்கல், தளவாய்ப்பட்டி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக குடிநீர் இன்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து குழாய் உடைப்பை சரி செய்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்