ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-07-14 17:52 GMT

பர்கூர் தாலுகா மல்லப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகே மிகவும் பழமைவாய்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இந்த தொட்டியின் அருகே கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, மற்றும் குடியிருப்புகள் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே தாமதம் இன்றி ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், மல்லப்பாடி.

மேலும் செய்திகள்