அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் ஓடை அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதான நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் ஏற்றப்படும் குடிநீர் முழுவதும் வீணாக வெளியேறி கீழே சிந்துவதால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.