மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உள்ளது. இந்த குடிநீர் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க வர முகம் சுளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து காலை, மாலை இருவேளையும் பேரூராட்சி ஊழியர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.