பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2024-06-23 12:12 GMT

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு அரசு குடியிருப்பு பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவில்லை. இதனால் அரசு பணம் வீணாகும் நிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள அந்த குடிநீர் தொட்டியை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்