நதியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

Update: 2024-06-16 17:44 GMT

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் சரபங்காநதி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் ஆகாயத்தாமரைகளால் நதி ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்நிலையில் தேவூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து செல்ல சரபங்காநதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரைகள் நதியை சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சரபங்கா நதியில் சூழ்ந்து காணப்படும் ஆகாயத்தாமரைகளை அகற்ற முன் வரவேண்டும்.

-நாராயணன், தேவூர்.

மேலும் செய்திகள்