பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி

Update: 2024-06-16 12:39 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்