குளம்போல் தேங்கும் தண்ணீர்

Update: 2024-06-09 16:21 GMT

பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு முறையான கழிவுநீர் கால்வாய்கள், சிமெண்டு சாலை வசதிகள் இன்றி உள்ளது. இதனால் கழிவு நீர் அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகம் பகுதிகளில் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரகுப்பம் கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வருண், பர்கூர்.

மேலும் செய்திகள்