தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்

Update: 2024-05-26 17:12 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பஞ்சப்பள்ளி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்துக்கு பயணிகள், பொதுமக்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காமராஜ், பஞ்சப்பள்ளி.

மேலும் செய்திகள்