சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2024-05-19 16:19 GMT

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு மற்றும் மாதபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குழாய்களில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் சில சமயங்களில் அந்த குடிநீரில் புழுக்களும் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வம், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்