குடிநீர் தொட்டியை திறக்க கோரிக்கை

Update: 2024-05-05 12:40 GMT

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி போசம்பட்டி ராஜாநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்