வாய்க்காலை தூர்வார கோரிக்கை

Update: 2024-05-05 11:20 GMT

கரூர் மாவட்டம், பள்ளபாளையம் ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கடந்த பல மாதமாக பெரிய அளவில் மழை இல்லாத போதிலும் சுமாரான அளவில் கரூர் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது .தற்போது வாய்க்கால் செல்லும் பாதையை தூர்வாரினால் மழைநீர் வரும்பொழுது தடையில்லாமல் செல்ல முடியும்.ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதை கருத்தில் கொண்டு விரைவில் ராஜ் வாய்க்காலில் முளைத்துள்ள செடி கொடிகளை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .குறிப்பாக இந்த வாய்க்காலில் பெரிய அளவில் தூர் வாராமல் புதர்கள் மண்டி கிடைக்கிறது. இதனை சரி செய்தால் மழை வருவதற்கு முன்பாக தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறைந்த நடவடிக்கை எடுத்த ராஜாவைக்காய் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்