தூர்வாரப்படுமா?

Update: 2024-05-05 09:50 GMT

தலக்குளம் ஊராட்சியில் ஆலயன்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் முறையாக பராமரிக்காததால் குளத்தில் ஆகாயதாமரை, பாசிகள் படர்ந்தும், சுற்றுசுவர் இடிந்து ஆபத்தான நிலையிலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்படுகிறது. எனவே குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவரை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்