ஆபத்தான பள்ளம்

Update: 2024-04-28 15:51 GMT

கொடுமுடி-முத்தூர் சாலையில் பெருமாள் கோவில் புதூர் அருகே கொடுமுடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய பெரிய குழாய்கள் பதிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்