குடிநீர் பற்றாக்குறை

Update: 2024-04-21 17:51 GMT

குமாரபாளையம் தாலுகா தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட கீரிகாடு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 25 வீடுகளுக்கும் சேர்த்து ஒரு 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மட்டுமே உள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பமும் தண்ணீர் எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமமாகவும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்