குடிநீர் வேண்டும்

Update: 2024-04-21 17:44 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில்மேடு பகுதியில் மருதம் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை. குடிநீரின்றி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுமன், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்