குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-21 15:40 GMT

 ஈரோடு பெரியவலசு திலகர் வீதி பகுதியில் பொது குழாயில் இருந்து தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் நூதன முறையில் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொது குழாயில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் நபர்களை கண்டுபிடிக்கவும், பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்