ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-04-14 13:01 GMT

கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி ஊராட்சி, பெரியவரப்பளையம் காலனியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் காலப்போக்கில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாடத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்