வீணாகும் குடிநீர்

Update: 2024-04-07 15:32 GMT

ஈரோடு பெருந்துறை ரோடு மற்றும் ஈ.வி.என். சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன. மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.  உடனே குடிநீ்ர் குழாயின் உடைப்பை சரிசெய்து சாலை விரிவாக்க பணியையும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்