தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-04-07 11:48 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கரியமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னக்கரை கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயைச் சுற்றி கடந்த 6 மாதங்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்