நிரப்பப்படாத குடிநீர் தொட்டி

Update: 2024-03-31 13:43 GMT

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் பகல் நேரங்களில் அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் போதுமான அளவில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் பயணிகளும், பொதுமக்களும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்திற்குள் அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கவும், அதில் முறையாக குடிநீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்