ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2024-03-24 18:01 GMT
பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூரில் உள்ள ஏரியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் ஏரியில் தற்போது விழல்கள் அதிக அளவில் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுவதால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க ஏரியை முறையாக தூர் வாருவதோடு, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்