இடியும் நிலையில் தண்ணீர் தொட்டி

Update: 2024-03-10 16:23 GMT

இடியும் நிலையில் தண்ணீர் தொட்டி

பெருமாநல்லூரை அடுத்துள்ள பொங்குபாளையம் பரமசிவம் பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கதவு பகுதியில் உள்ள சிலாப்புக்கு முட்டுக் கொடுத்து நிற்க வைத்திருப்பது பெரிய ஆபத்தான செயலாக உள்ளது. இந்த தண்ணீர் தொட்டிக்கு நேர் எதிரே பள்ளி குழந்தைகள் படிக்கின்ற அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுவதற்குள் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்முருகன்,பொங்குபாளையம்.

9876753723

மேலும் செய்திகள்