வீணாகும் குடிநீர்

Update: 2024-03-10 14:48 GMT

 சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியூர்-உக்கரம் செல்லும் சாலையில் உள்ள ஜல்லியூர் கட்டபொம்மன் வீதியில் உள்ள பொது குடிநீர் குழாய் கடந்த பல நாட்களுக்கு முன்பு பழுதடைந்து உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்