குடிநீர் குழாய் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-03-10 13:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஆத்தூர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த குடிநீர் குழாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், உடைந்தும் உள்ளது. கோடைகாலம் வர உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த குடிநீர் குழாயை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்