ஏரி ஆக்கிரமிப்பு

Update: 2024-03-03 16:42 GMT
மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஏரி மற்றும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீர் சீராக வருவதில்லை். மேலும் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி ஏரி மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்