வீணாகும் குடிநீர்

Update: 2024-03-03 12:45 GMT

கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் நடைபாதை ஓரத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக குடிநீர் அதிகளவில் வெளியேறி வீணாகி வருகிறது. ஏற்கனவே கோடை காலம் தொடங்கியதால், குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே நிலவி வருகிறது. ஆனால், இங்கு குடிநீர் வீணாவது, பலரையும் வேதனையடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர், குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்