கிணறு பராமரிக்கப்படுமா?

Update: 2024-02-25 12:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம், குப்பைகாரியம்மன் கோவில் தெருவில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த, கிணற்றிலிருந்து அந்த தெருவில் உள்ள பொது மக்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இந்தநிலையில், கிணற்றில் செடி, கொடிகள் படர்ந்து குப்பை காடாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்