நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-02-25 12:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அனங்காபுதூர் அம்பேத்கர் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால், கடந்த 8 மாதங்களாக அந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே, குடிநீர் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், கழிவுநீர் கலந்த தண்ணீரை உபயோகிப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்