பழுதான குடிநீர் தொட்டி

Update: 2024-02-11 16:38 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தர்மன், அத்திமூட்லு, தர்மபுரி.

மேலும் செய்திகள்