குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2024-02-11 11:49 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மேட்டுப்பாளையம் முதல் நிலை பேரூராட்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எப்போதாவது குடிநீர் வினியோகம் செய்யலாம் என்ற நிலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்