குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2024-01-28 15:46 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லாபுரம் செல்லும் சாலையில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரில் நீண்ட நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இந்த பகுதியில் கல்லூரி, பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலை என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்