பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2024-01-28 15:36 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சோமனஅள்ளி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் உள்ளது. இந்த எந்திரம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகி விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் பொதுமக்களுக்கு உடல்நல கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் எந்திரத்தை சரிசெய்து தரவேண்டும்.

-பொதுமக்கள், சோமனஅள்ளி.

மேலும் செய்திகள்